30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நேற்று 263 தொற்றாளர்கள்!

இலங்கையில் நேற்று (12) மேலும் 263 தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 95,394 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 203 பேர் மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 90,242 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 38 நபர்களும் நேற்று COVID-19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

தற்போது நாடு முழுவதும் பல வைத்தியசாலைகளில் 3,021 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, COVID-19 இலிருந்து குணமடைந்த 144 பேர் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 91,775 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று சந்தேகத்தில் 247 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

Leave a Comment