29.6 C
Jaffna
April 19, 2024
கிழக்கு

கல்முனையில் கை வைக்காதீர்கள்; பாண்டிருப்பை புதிய பிரதேச செயலகமாக்குங்கள்: உலமா தலைவர்!

தேர்தல் காலம் வந்தால் கிழக்கில் அதிலும் குறிப்பாக கல்முனையில் பல பூதங்கள் வெளிவரும். அதில் முக்கியமான பூதம் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல், பிரித்தல் என்ற பூதம். இந்த பூதத்தை தேர்தல் காலங்களில் கொண்டுவருவது அரசியல்வாதிகளே. இவர்களுக்குள் பேசிக்கொண்டுதான் இவ்வாறு மக்களை ஏமாற்றுகிறார்களா? என்ற சந்தேகம் மக்களிடம் தொடர்ந்தும் இருந்தே வருகிறது. இப்போதெல்லாம் இது தொடர்பில் பேசாதவர்கள் தேர்தல் வந்தால் இதை மட்டுமே பேசுகிறார்கள். கருணா அம்மான், எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் அரசுடன்தானே இருக்கிறார்கள். இவர்கள் ஏன் அரசாங்க தலைவர்களிடம் பேசி ஒரு தீர்வை காண முடியாது? கல்முனைக்கு ஒரு பிரதேச செயலகம் மட்டுமே போதுமானது, பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பை ஒன்றிணைத்து பாண்டிருப்பு பிரதேச செயலகத்தை உருவாக்க வேண்டும் என உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

நேற்று (12) இரவு கல்முனை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

தமிழீழ விடுதலை புலிகள் கோலோச்சிய 1987 ம் ஆண்டு காலத்தில் நூறு வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசம் என்று கூட பாராது இந்திய றோவின் ஆலோசனையுடன் இந்த பிரதேச செயலகத்தை துண்டாட முயற்சித்தர்கள். அதன் பின்னர் 1989 முதல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆளுகையில் இருந்துவரும் கல்முனைக்கு அமைச்சராக இருந்த, பிரதியமைச்சராக இருந்த பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எந்த ஒரு உறுப்பினரும் தீர்வை பெற்றுத்தரவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நினைத்தால் இந்த பிரச்சினையை இலகுவாக தீர்த்திருக்க முடியும்.

மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் இனவாதம், பிரதேசவாதம் வெகுவாக தலைதூக்கும் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர், முஸ்லிம் என்ற வாதங்களை கிளப்பி விட்டு ஊர்களுக்கிடையே வாதங்களை உண்டுபண்ணி தேர்தலை வெல்ல பல நாடகங்கள் அரங்கேறும். அவ்வாறான நாடகங்களையும், அந்த நாடகங்களை இயக்கும் அரசியல் கட்சிகளையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். யார் முதலமைச்சர் ? தமிழரா அல்லது முஸ்லிமா என்ற கதைகளும் பேசுபொருளாக மாறும் இந்த விடயத்தில் மக்கள் தெளிவாக இருப்பது அவசியமாகும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சியான நாங்கள் அண்மையில் எங்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் பேசியுள்ளோம். கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் எங்களின் கட்சி கட்டாயம் போட்டியிடும்.

எமது நாட்டை ஆளும் ராஜபக்ஸக்கள் தேர்தலுக்கு முகம்கொடுக்க தயங்குபவர்கள் அல்ல. இந்த வருட இறுதிக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் சாத்தியம் அதிகமாக உள்ளது. கடந்த நல்லாட்சிக்காரர்கள் சில சிறுபான்மை கட்சிகளையும் இணைத்துக்கொண்டு செய்த திருகுதாளங்களினால் தேர்தலை இப்போது நடத்துவதில் சில சட்டசிக்கல்கள் இருக்கிறது. இருந்தாலும் அந்த தேர்தல் நடைபெறும். நாங்கள் மாகாண சபைகள் முறைமைக்கு எப்போதும் எதிரானவர்கள் இருந்தாலும் ஜனநாயக கடமையான தேர்தல் நடைபெற்றால் நாங்கள் ஆதரிக்க பின்நிற்க போவதுமில்லை.

கடந்த 4.5 வருடங்கள் காலத்தை வீணடித்த எதிராணியினருக்கு இப்போதுதான் ஞானம் வந்தது போன்று அரசை விமர்சிக்கிறார்கள். ஈஸ்டர் தாக்குதல் கைதை ஆரம்பித்தவர்கள் யார் என்பதை ஹக்கீம், முஜிபுர்ரஹ்மான், சஜித் போன்றோர்கள் மறந்து விட்டார்கள் போல. அவர்களின் நல்லாட்சியில் தான் முஸ்லிங்கள் குரானை எரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள், அரபு எழுத்துக்களை கண்டு நடுங்கினார்கள் என்பதை அவர்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன். முஸ்லிங்கள் அந்த காலப்பகுதியில் கஷ்டப்படும் போது புதினம் பார்த்துக்கொண்டிருந்த சஜித் இப்போது நல்ல பிள்ளை போன்று நடிக்கிறார். சமூகத்தை பற்றிய தெளிவில்லாமல் பொதுவெளியில் கருத்து சொல்லும் மு.கா தலைவர் ஹக்கீம் அவர்கள் வழமைபோன்று இப்போதும் சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார். ஸஹ்ரான் தொடர்பில் முஸ்லிம் சமூகம் அறிந்திருந்தால் அவர்களை அடியோடு இல்லாமலாக்கி சட்டத்தின் பிடியில் அவர்களை கொண்டு சேர்த்திருப்பார்கள். ஹக்கீம் குழப்பவாதிகளுக்கு எப்போதும் பக்கபலனாக இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புலிகள் கடத்தல்காரர்கள்: உலமா கட்சி தலைவர் உளறல்!

Pagetamil

24வது நாளாக கல்முனை மக்கள் போராட்டம்!

Pagetamil

சாய்ந்தமருது மாலை நேர கடைகளில் சோதனை : டேஸ்ட் கடைகளில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கூட கண்டுபிடிப்பு!

Pagetamil

சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் இயங்கிய போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பில் சிக்கியது

Pagetamil

14 வயது சிறுமியை கடத்திய 17 வயது காதலன் கைது!

Pagetamil

Leave a Comment