செல்வம் எம்.பியின் இலட்சினையை ஐ.தே.க போலியாக பயன்படுத்தி கடிதம் அனுப்பியதா?

Date:

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் நாடாளுமன்ற அஞ்சல் முத்திரைகளை ஐ.தே.க மோசடியாக பயன்படுத்தியதாக சிங்கள் ஊடகமொன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவைக்காக அஞ்சல் முத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த அஞ்சல் முத்திரைக்கு மேலாக, நாடாளுமன்ற உறுப்பினர் தனது இலட்சினையை பொறித்து, உத்தியோகபூர்வ தேவைகளிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வசதியை பயன்படுத்தியே பல எம்.பிக்கள் தேர்தல் காலங்களில் பொதுமக்களிற்கு கடிதங்களை அனுப்புவார்கள்.

தற்போது ஐ.தே.கவில் எந்த எம்.பியும் கிடையாது. வீணாக பணம் செலவழித்து அஞ்சலை அனுப்பாமல், யாராவது எம்.பியின் பெயரில் கடிதங்களை அனுப்புவோம் என யோசித்தார்களோ, என்னவோ, செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் இலட்சினை பொறிக்கப்பட்ட அரச பணி கடித உறைகளை ஐ.தே.கவினர் பயன்படுத்தி கடிதங்களை அனுப்பியதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுபற்றி தான் செய்திகளை படித்தே அறிந்ததாகவும், விசாரணையை கோரியுள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

செல்வம் அடைக்கலநாதனின் அலுவலக பணியாளர்கள் யாரேனும் இலட்சினையை வழங்கினார்களா அல்லது இலட்சினை போலியாக தயாரிக்கப்பட்டதா அல்லது இதில் வேறோதும் விவகாரங்கள் அடங்கியுள்ளதா என்பது இதுவரை தெரியவரவில்லை.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...

பெண்ணின் தலைமுடியை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல்

இணையத்தில் பரப்பப்பட்ட ஒரு காணொளிக் காட்சியின்படி, பொருட்கள் திருட்டு தொடர்பாக பல்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்