ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக மீண்டுமொரு தமிழ்பெண்!

Date:

சிறு வயதிலிருந்தே படகோட்டும் ஆர்வம் கொண்டிருந்த நேத்ரா, 2014, 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாகப் பங்கேற்றார். 2014 இன்சியான் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றபோது அவருக்கு 16 வயது மட்டுமே!

இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தமிழகத்தைச் சேர்ந்த படகோட்டுதல் வீராங்கனை நேத்ரா குமனன் தெரிவாகியிருக்கிறார். 23 வயதான நேத்ராவே இந்தியா சார்பாக படகோட்டுதலில் பங்கேற்கப்போகும் முதல் பெண்!

கடந்த ஆண்டு நடக்கவேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் தொடர், கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஓராண்டு தள்ளிப்போனது. வரும் ஜூலை 23-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடருக்கு பல்வேறு விளையாட்டுகளிலிருந்து பல வீரர் வீராங்கனைகள் தேர்வாகிவருகின்றனர். தமிழகத்தில் இருந்து இதுவரை 4 பேர் பங்கேற்பது உறுதியாகியிருக்கிறது. டேபிள் டென்னிஸ் வீரர்கள் ஷரத் கமல், சத்யன் ஞானசேகரன், வாள்சண்டை வீராங்கனை பவானிதேவி, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன் ஆகியோர் இதுவரை தங்கள் இடத்தை உறுதி செய்திருக்கின்றனர். இதில் பவானி தேவி, வாள்சண்டையில் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இப்போது இன்னொரு தமிழகப் பெண்ணும் டோக்கியோவுக்குப் பயணம் செல்கின்றார்.அவரே சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமனன். படகோட்டுதல் வீராங்கனையான நேத்ரா ‘Laser Radial’ எனப்படும் பிரிவில் ஒலிம்பிக் தொடருக்குத் தெரிவாகியிருக்கிறார். இது தனிநபர் போட்டி.
2018 ஜகர்தா தொடரில் ஐந்தாம் இடம் பெற்றார். மியாமியில் நடந்த உலகக் கோப்பையில் வெண்கலம் வென்று, உலகக் கோப்பைப் படகோட்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையையும் படைத்தார்.

இப்படி தொடர்ந்து தன் செயல்பாட்டில் முன்னேற்றம் காட்டிவந்தவர், இப்போது உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் தொடருக்குத் தேர்வாகி சரித்திரம் படைத்திருக்கிறார். ஸ்பெய்னில் பயிற்சி பெற்று வரும் நேத்ரா, ஒரு பொறியியல் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...

பேருந்துக்குள் இளம்பெண் மீது அத்துமீறல்: நடத்துனர் கைது!

பிபில-மொனராகல வழித்தடத்தில் இயங்கும் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் பயணி...

கம்பஹா உஸ்மானுக்கு 72 மணித்தியால தடுப்புக்காவல்

அசர்பைஜானிலிருந்து பிடிக்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பதுவத்த சமரவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது வெளிப்படுத்தப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்