வீட்டுக்குள் இரகசிய பங்கர் அமைத்து மறைந்திருந்த பிரபல தாதா சிக்கினார்!

Date:

முல்லேரியா பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஜீடி என்றழைக்கப்படும் சரத் குமார என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் உயிரிழந்த அங்கொட லொக்காவை ஆரம்பத்தில் குற்றச் செயல்களுக்கு ஈடுபடுத்தியவர் இவர் என சரத் குமார அடையாளம் காணப்பட்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

முல்லேரியவில் உள்ள ஒரு வீட்டிற்குள் நிலத்தடி பதுங்கு குழிக்குள் ஒளிந்து கொண்டிருந்த நிலையில், அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெலகமவில் விசேட அதிரடிப்படையினரால் 112 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் சம்பவத்தில், 44 வயதான இந்த நபர்  9 வது சந்தேக நபராக பெயரிடப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...

பேருந்துக்குள் இளம்பெண் மீது அத்துமீறல்: நடத்துனர் கைது!

பிபில-மொனராகல வழித்தடத்தில் இயங்கும் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் பயணி...

கம்பஹா உஸ்மானுக்கு 72 மணித்தியால தடுப்புக்காவல்

அசர்பைஜானிலிருந்து பிடிக்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பதுவத்த சமரவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது வெளிப்படுத்தப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்