அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேற்று இரவு சிறிலங்கா சுதந்திரக்கட்சி க தலைமையகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த கலந்துரையாடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமை தாங்கினார். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவா நாணயக்கார, டியூ குணசேகர மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மாகாணசபை தேர்தல் முறைமையில் சிறிய கட்சிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.




