யாழ்.மாநகர காவல் படை முதல் தடவையாக இன்று காலை தமது பணியை ஆரம்பித்துள்ளது.
யாழ்.மாநகரில் சுகாதார நடைமுறைகளை கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையை கண்காணித்தல் மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பது, தண்டப்பணத்தை அறவிடுவதற்காக குறித்த மாநகர பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த மாநகர பாதுகாப்பு படை நாளை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ள நிலையில் இன்று காலை பரீட்சார்த்தமாக நல்லூர் சுற்றாடலில் வாகன ஒயில் ஊற்றப்பட்ட நிலையில் விபத்துக்களை தவிர்க்க முன்னாயத்த நடவடிக்கைகளை குறித்த மாநகர பாதுகாப்பு படை கண்காணித்தது.
யாழ் மாநகர சுகாதார பணிமனைகளில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் 5 பேரை, புதிய சீருடையொன்றை அறிமுகம் செய்து, மாநகர காவல் படையென்ற பெயரில் யாழ் மாநகரசபை உருவாக்கியுள்ளது.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1
2