23.9 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

மேலும் 2 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் இன்று (06) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், நாட்டில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்-

பிபில பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான ஆண் ஒருவர், பிபிலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (04) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், உக்கிர சிறுநீரக செயலிழப்பு, குருதி விஷமடைவு மற்றும் கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை, மகா ஓயா பிரதேசத்தைச் சேர்ந்த, 47 வயதான ஆண் ஒருவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (05) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர இலுக்கேமியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் சிவப்பு குடிநீர் விநியோகம் – அவதியில் மக்கள்

east tamil

அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

east tamil

டிஜிட்டல் கொடுப்பனவுகளின் புதிய யுகம்

Pagetamil

ஐம்பது மீற்றரில் உள்ள பாடசாலை மைதானத்திற்கு ஒரு கிலோ மீற்றர் நடந்து செல்லும் மாணவர்கள்

Pagetamil

புதையல் தோண்டிய இருவர் கைது

east tamil

Leave a Comment