இலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் இன்று (06) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், நாட்டில் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 588 ஆக அதிகரித்துள்ளது.
இன்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்-
பிபில பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான ஆண் ஒருவர், பிபிலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (04) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், உக்கிர சிறுநீரக செயலிழப்பு, குருதி விஷமடைவு மற்றும் கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, மகா ஓயா பிரதேசத்தைச் சேர்ந்த, 47 வயதான ஆண் ஒருவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கொடை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (05) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா மற்றும் உக்கிர இலுக்கேமியா நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.