6 மாவட்டங்களிற்கு நாளை விடுக்கப்பட்டுள்ள அபாய அறிவித்தல்!

Date:

இலங்கையில் ஆறு மாவட்டங்களில் நாளை வெப்பநிலை ‘தீவிர எச்சரிக்கை’ நிலைக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பொலனறுவை,, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை வெப்பநிலை ஆபத்தான அளவில் இருக்கும்.

இதனால் உடல் சோர்வு ஏற்படலாமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் உள்ள மக்கள் நாளை இயன்றவரை வெளியில் நடமாடுவதை தவிர்ப்பதுடன், நிழலான பகுதிகளில் தங்கியிருக்குமாறும், அடிக்கடி நீர் பருகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மெல்லிய மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தில்ஷான் மதுஷங்கவை ஒப்பந்தம் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

காயம் காரணமாக விலகிய பிரைடன் கார்ஸுக்குப் பதிலாக தில்ஷான் மதுஷங்கவை சன்ரைசர்ஸ்...

அமெரிக்க முற்றுகையை கடந்து சென்ற ஈரானிய கப்பல்கள்

அமெரிக்க இராணுவத் தடையையும் மீறி, ஈரானியத் துறைமுகங்களிலிருந்து பயணித்த குறைந்தது இரண்டு...

மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தார் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்ட பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்