29.3 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

யாழ் மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு தொற்று!

யாழ் மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று (31) இரவு பிந்தி வெளியான முடிவுகளின் படி,  யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, சிறி ஜெயவர்த்தனபுர வைத்தியசாலை, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகளில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 45 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 756 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. இதில் 25 பேர்  தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நகரின் புதிய சந்தை தொகுதியில் 8 பேரும், சண்லிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேரும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேரும், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 5 பேரும்  தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

சிறி ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் 320 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. இவை அனைத்தும் புதிய சந்தையுடன் தொடர்புடையவர்கள். இதில் 7 பேருக்கு தொற்று உறுதியானது.

முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் 551 பேரின் பி.சிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டது. இவையும் புதிய சந்தையுடன் தொடர்புடையவர்களின் மாதிரிகள். இதில் 13 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment