29.8 C
Jaffna
March 29, 2024
உலகம்

எச்சரிக்கை; நீங்களும் குளியலறையில் தொலைபேசி பாவிப்பவரா?: இளம்பெண்ணிற்கு நேர்ந்த கதி!

சார்ஜ் ஏற்றப்பட்ட நிலையிலிருந்த தொலைபேசியில் உரையாடியபடி, குளித்த இளம்பெண்ணொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவின் டோகுச்சினில் உள்ள தனது வீட்டில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அனஸ்தேசியா ஷெர்பினினா (25) மின்சார அதிர்ச்சியால் உயிரிழந்துள்ளார்.

குளியலறைக்குள் விசித்திரமான சத்தம் கேட்டு, 4 வயது மகன் அங்கு சென்ற போது, தாயார் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். தாயாரின் மார்பில் பெரிய தீக்காயத்தை அவதானித்த மகன், அவரை காப்பாற்ற முயன்ற போது, மின் அதிர்ச்சியை உணர்ந்து, தொலைபேசியை மின் இணைப்பிலிருந்து விடுவித்ததன் மூலம், தன்னை காப்பாற்றிக் கொண்டார்.

அனஸ்தேசியாவின் நண்பர் ஒருவர் கூறுகையில், யாரோ ஒருவரின் அழைப்பிற்காக அவர் காத்திருந்தார். அழைப்பு வந்தபோது அவர் சார்ஜரிலிருந்து தொலைபேசியை இழுத்தார். சார்ஜர் வயர் கழறாமல், மின் இணைப்பிலிருந்து சார்ஜர் கழன்று, நீருக்குள் விழுந்ததை தொடர்ந்து, மின் அதிர்ச்சியினால் அவர் உயிரிழந்தார் என தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment