பன்னிப்பிட்டி பகுதியில் நடுவீதியில் லொறி சாரதியை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லொறி சாரதியை நடுவீதியில் விழுத்தி, பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் நேற்று விசாரணையைத் தொடங்கினர்.
மஹரகம பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்ட உத்தியோகத்தரே இந்த தாக்குதலை மேற்கொண்டார்.
மஹரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியை லொறி மோதியதை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது.
இதேவேளை, இந்த தாக்குதலிற்குள்ளான சாரதியும் கைது செய்யப்பட்டார். இருவரும் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
2
+1
3
+1
4
+1
3