கடந்த 24 மணி நேரத்தில் வீதி விபத்துக்களில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்றைய விபத்துக்களில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த 3 பேர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தூக்கக்கலக்கத்தில், மதுபோதையில் வாகனம செலுத்துவது, பொறுப்பற்ற விதமாக வாகனம் செலுத்துவது போன்ற காரணங்களினால் அதிகளவான விபத்துக்கள் நடப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலங்களில், குடும்பங்கள் அல்லது தனிநபர்கள் விடுமுறைக்கு செல்லும் போது, குடிபோதையில் வாகனம் செலுத்துவதை தவிர்க்கும்படியும், அறிமுகமில்லாத வீதிகளில் பயணிக்கும் போது எச்சரிக்கையுடன் பயணிக்கவும் அறிவுறுத்தினார்.




