போலி ஆவணங்கள் தயாரித்து வாகனங்கள் விற்ற 4 பேர் கைது!

Date:

போலி ஆவணங்களை தயாரித்து வாகன விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநாகல் பிரதேசத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தி செல்லப்படும் அல்லது திருடப்படும் வாகனங்களின் ஆரம்ப பதிவுக்கான புத்தகங்களை காப்புறுதி நிறுவனங்களில் கொள்வனவு செய்து அதைபோன்று தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் சந்தேக நபர்கள் வாகனங்களை விற்பனை செய்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

2009இல் முல்லேரியாவில் வாகனமொன்று திருடப்பட்டதற்கும் இவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். ஆனால் அந்த வாகனம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அதே இலக்கத்தகடு, பதிவு புத்தகத்துடன் ஒரு வாகனத்தை மேல் மாணத்தின் தெற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்