26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ரவி கருணாநாயக்க குழுவினர் வெலிக்கடை சிறை தனிமைப்படுத்தல் மையத்தில்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேரும் வெலிக்கடை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, அர்ஜுன் ஜோசப் அலோசியஸ், சங்கரப்பிள்ளை பதுமநாதன், படுகொட ஹேவ இந்திக சமன் குமார உள்ளிட்ட 8 பேர் கொழும்பு உயர்நீதிமன்றத்தின் விசேட நீதாயத்தினால் இந்த மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் டமித் தொட்டவத்த, மஞ்சுள திலகரத்ன மற்றும் முகமது இர்பதீன் ஆகியோர் அடங்கிய விசேட நீதாயம் முன் இந்த வழக்கு விசாரணைக்கு நேற்று (17) எடுக்கப்பட்டது.

2016 மார்ச் 29,-31ஆம் திகதிக்கிடையில் நடைபெற்ற மத்திய வங்கி பிணைமுறி  ஏலத்தில் ரூ .3698 மில்லியன் (ரூ. 36.98 பில்லியன்) முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்ரியா ஜெயசுந்தர, தேசிய பொருளாதாரம், வட்டி விகிதங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் தீங்கு செய்த குற்றவாளிகளுக்கு பிணை வழங்குவதை எதிர்ப்பதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

தேசிய பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு சிறப்பு வழக்கு. பிணைமுறி மோசடி  பிரச்சினைக்கு பொதுமக்கள் நீதி கோருவதாகவும், ஆசிய பிராந்தியத்தில் ஒரு அமைச்சர்  வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக பெயரிடப்பட்ட ஒரே வழக்கு இது என்றும் அவர் கூறினார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மற்றும் 9 வது குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாட்டில் இருப்பதால் பொருத்தமான உத்தரவுகளை பிறப்பிக்க நீதிமன்றை அவர் கோரினார்.

இந்த வழக்கில் 4 வது குற்றவாளியிடமிருந்து குற்றம் சாட்டப்பட்ட ரவி கருணநாயக்க பரிசாக ஒரு வீட்டைப் பெற்றுள்ளார் என்று துணை சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டினார். பிணைவழங்குவதை எதிர்ப்பதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் சவேந்திர பெர்னாண்டோ, காமினி மாரபன, அனில் டி சில்வா மற்றும் அனுஜ பிரேமரத்ன ஆகியோர் பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையாகினர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் துணைப்பிரிவு 450 (06) இன் கீழ் பிணையை எதிர்ப்பதற்கு சட்டமா அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை என்றும், பிணை சட்டத்தின் 14 வது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றம் பிணை வழங்க முடியும் என்றும் வாதிட்டனர்.

சட்டமா அதிபர் கூறிய குற்றச்சாட்டுகள் முழுமையற்றவை என்றும், குற்றச்சாட்டுகளுக்கான இணைப்புகளை சமர்ப்பிக்காதபோது பிணையை எதிர்ப்பது நியாயமில்லை என்றும் வாதிட்டனர்.

பிணைமுறி ஏலத்தின் இறுதி முடிவுகளை செயற்கையாக மாற்றுவதற்காக  மத்திய வங்கியின் முக்கியமான வெளியிடப்படாத தகவல்களைப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் குற்றம் சாட்டினார். இந்த மோசடி பத்திர சந்தையில் மற்ற முதன்மை விற்பனையாளர்களுக்கு அநீதியை ஏற்படுத்தியுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனம் தந்திரமாக செயல்பட்டு பெரும் லாபம் ஈட்டியதாகவும், அரசாங்கத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்த சதி செய்ததாகவும் சட்டமா அதிபர் மேலும் குற்றம் சாட்டினார்.

பிணைமுறி மோசடியானது சதி, கிரிமினல் முறைகேடு, மோசடி மற்றும் சந்தை கையாளுதல் ஆகியவற்றுக்கான பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை கட்டளைச் சட்டத்தின் 56 வது பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன. முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன், அர்ஜுன் அலோசியஸ், கசுன் பாலிசேன, ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ், ரஞ்சன் ஹுலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன், அஜான் புஞ்சிஹேவ , பதுகொட ஹேவா இந்திக சமன் குமார ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment