உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் அடுத்த வாரம் அகழ்வாராய்ச்சி ஆரம்பம்!

Date:

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவனாலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுப்பணி மேற்கொள்வதற்காக முன்னாயத்தங்கள் இன்று (16) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி அங்கு அகழ்வாராச்சி ஆரம்பிக்கப்படவுள்ளது.

உருத்திரபுரம் சிவன் ஆலய வளாகம் இன்று செவ்வாய்க்கிழமை தொல்பொருள் திணக்களத்தனரால் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

பண்டைய சிவன் ஆலயம் இருந்த பகுதி மண்மேடாக காட்சியளிக்கும் நிலையில், அந்த இடத்திலேயே அகழ்வாராய்ச்சி இடம்பெறவுள்ளது. பற்றைகள் வளர்ந்திருந்த அந்த இடம் இன்று துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆலயமும் பௌத்தர்களிற்கு சொந்தமானது என கூறி, பிக்குகள் சிலர் முன்னர் அங்கு வந்து சென்றிருந்தனர்.

குருத்தூர் மலை விவகாரத்தின் பின்னர் உருத்திரபுரம் சிவன் ஆலய பகுதிக்கு பௌத்த துறவி ஒருவரும், பொலிஸாரும் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இந்த நிலைல் அங்கு எதிர்வரும் 23ம் திகதி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்