தனது கணவர் முன்னாள் காதலிக்கு கையசைப்பதாக குறிப்பிட்டு மனைவி விவாகரத்து கோரியுள்ளார். இந்த விசித்திர சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
அரச உத்தியோகத்தரான இளம்பெண், திருமணமான ஒரு வருடத்திற்குள் இந்த விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டின் மாடி தளத்தில் இளம் தம்பதியொன்று புதிதாக குடி வந்துள்ளது. அடுத்த வீட்டு பெண்ணும், தனது கணவனும் இரகசியமாக ஒருவருக்கொருவர் கையை காட்சிக் கொள்வதை அந்தப் பெண் அவதானித்துள்ளார்.
அது தொடர்ந்து நடந்து வருவதையடுத்து, கணவனிடம் விசாரித்து, சண்டையிட்டதில், அடுத்த வீட்டில் குடியிருப்பவர் கணவனின் முன்னாள் காதலியென்பதை மனைவி அறிந்துள்ளார்.
தனக்கு முன்னாள் காதலியிருந்ததையும், அவருடன் தொடர்பிருப்பதை அறிந்துமிருக்கவில்லை, இது கணவரின் ஏமாற்று என குறிப்பிட்டு, விவாகரத்து கோரியுள்ளார்.



