கிடைக்கும் அதிகாரங்களை வைத்துக் கொண்டு முன்னகருங்கள்: இந்திய தூதர் தமிழர்களிற்கு ஆலோசனை!

Date:

மாகாணசபை முறைமையை பலப்படுத்த இந்தியா நடவடிக்கையெடுக்க வேண்டுமென 10 தமிழ் கட்சிகளின் கூட்டு, இந்திய தூதரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

10 தமிழ் கட்சிகள் கூட்டின் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.வி.விக்னேஸ்வரன், பேராசிரியர் க.சிவநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சி சார்பில் என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பொ.ஐங்கரநேசன்,  ஜனநாயக போராளிகள் சார்பில் வேந்தன், கதிர், ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகம் சார்பில் அனந்தி சசிதரன் ஆகியேர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது, மாகாணசபையை வலுப்படுத்துவது பற்றி கோரிக்கை விடுக்கப்பட்டது.

காணி அபகரிப்பு பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது. வேலைவாய்ப்புடன் கூடிய அபிவிருத்தி திட்டம் பற்றியும், இந்திய உயர்கல்வி நிறுவனங்களை வடக்கில் திறப்பது பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கை மக்களுடன் தொடர்ந்து நாம் இருப்போம். கிடைக்கும் அதிகாரங்களை வைத்துக் கொண்டு படிப்படியாக முன்னகர வேண்டும் என சுருக்கமாக இந்திய தூதர் தெரிவித்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்