வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை 14 நாட்களிலிருந்து 7 நாட்களாகக் குறைக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை கோரியுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கையர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதிக்குமாறும் கோரியுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.
இரு கோரிக்கைகளும் வரும் நாட்களில் அங்கீகரிக்கப்படும் என்று இராணுவத்தளபதி நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கையர்களை ஹோட்டல் தனிமைப்படுத்தலின் போது எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்தார்.



