பணிப்பெண்கள் என்ற பெயரில் ஓமான் சுல்தான்களிற்கு இலங்கை யுவதிகளை விற்ற பெண் கைது!

Date:

ஓமானில் வேலைவாய்ப்பிற்காக அனுப்புவதாக கூறி, பெண்களை ஏமாற்றி, பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவு மற்றும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

வெளிநாடுகளிற்கு பணிப்பெண்களாக சென்று, அங்கு துன்புறுத்தல்களை எதிர்கொண்ட பின்னரர் பெப்ரவரி மாதத்தில் நாட்டுக்குத் திரும்பிய பெண்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மஹியங்கணையில் வசிப்பவர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரும் மற்றொரு குழுவும் மனித கடத்தல் வலையமைப்பை நடத்தி 22 முதல் 27 வயதுக்குட்பட்ட பெண்களை ஓமானுக்கு அனுப்பி சுல்தான்களுக்கு விற்றனர் என்பது தெரியவந்தது.

சிஐடிக்கும் மோசடி தொடர்பாக புகார்கள் செய்யப்பட்டிருந்ததாக வெளிநாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் பெப்ரவரி 25ஆம் திகதி ஓமானில் இருந்து இலங்கைக்கு வந்து 14 நாட்கள் வவுனியாவிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்க வைக்கப்பட்டார்.

தனிமைப்படுத்தல் காலத்தை முடித்த பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் தெஹியத்தக்கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, மார்ச் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மலேசியாவில் கட்டாய தொழிலாளியாக வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு: 7 இலங்கையர்கள் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை...

கபில சந்திரசேன மரண விசாரணையில் நீதிபதி அதிருப்தி

மர்மமான முறையில் மரணமடைந்தவரும், ஏர்பஸ் ஒப்பந்தத்தில் பிரதான சந்தேக நபருமான ஸ்ரீலங்கன்...

மோகினி அருவியில் முச்சக்கரவண்டி கவிழ்ந்ததில் 2 பேர் பலி

முல்கமவிலிருந்து லக்ஷபான நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, ஓட்டுநர் கட்டுப்பாட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்