ஹிருணிகா மீதான பிடியாணை வாபஸ்!

Date:

இளைஞரை கடத்திச் சென்றது தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்வதற்கான பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை  கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று மீளப்பெற்றுக் கொண்டது.

பிடியாணை உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி அமல் ரட்ணராஜா இன்று காலை வெளியிட்டார்.

முன்னாள் எம்.பி. பிரேமச்சந்திர தனது சட்ட பிரதிநிதிகளுடன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி, பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இருப்பினும், பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்ட பல நிமிடங்களுக்குப் பிறகு, ஹிருணிகா பிரேமச்சந்திரா நீதிமன்றத்திற்கு வந்தார்.

இந்த வழக்கு ஜூன் 17 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும்.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி தெமட்டகொட பகுதியில் ஒரு கடையில் பணிபுரிந்த ஒரு இளைஞரைக் கடத்தி, அவரை பிணைக் கைதியாக வைத்திருந்ததாக ஹிருணிகா பிரேமச்சந்திர மீது சட்டமா அதிபர் வழக்குப் பதிவு செய்தார்.

spot_imgspot_img

More like this
Related

யாழ் விபத்தில் இளைஞன் பலி

யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் இன்று நடந்த விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனிக்குளத்தில்...

ஐடி ஊழியர் கொலையில் மனைவி உட்பட 4 பேர் கைது

டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி....

மட்டக்களப்பில் நடந்த பதற வைக்கும் சம்பவம்!

களுவாஞ்சிகுடி கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகாமையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்