சஹ்ரானை வழிநடத்தியது நௌபர் மௌலவியே!

Date:

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக கட்டாரில் கைது செய்யப்பட்ட முகமது இப்ராஹிம் முகமது நௌபர் என்பவரால் சஹ்ரான் ஹாஷிம் வழிநடத்தப்பட்டதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

“சஹ்ரான் முதன்முதலில் 2017 இல் அலியார் சந்தி பகுதியில் தாக்குதல் நிகழ்த்தினார்.
இது மதக் கருத்துக்களைக் கொண்ட மக்கள் குழு மீதான தாக்குதல்.
தாக்குதலைத் தொடர்ந்து, ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு வரை அவருடன் தொடர்பு கொண்டிருந்த நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது உளவுத்துறை விசாரணைகளை மேற்கொண்டது.

அவர் பல ஆண்டுகளாக கத்தார் இராச்சியத்தில் இருந்த முகமது இப்ராஹிம் முகமது நௌபர் என்பவருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பது தெரிய வந்தது.

இந்த நௌபர் சஹாரனை ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியின் சித்தாந்தத்துடன் இணைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. நௌபர் என்று அழைக்கப்படும் நபர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார் ”என்று பொது பாதுகாப்பு அமைச்சர் கூறினார்

இதற்கிடையில், ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவிற்கு தெமட்டகொட இப்ராஹிம் சகோதரர்கள் ரூ .500 மில்லியனை வழங்கியதாகவும், அந்த பணத்துடன் தாக்குதலுக்கு தேவையான பொருட்களை அவர்கள் வழங்கியதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

டுபாயிலிருந்து தப்பியோடும் இலங்கை பாதாள உலக குற்றவாளிகள்

டுபாயில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக காவல்துறை ஒரு இரகசிய நடவடிக்கையைத்...

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பா?: முஜிபுர் ரஹ்மான் விளக்கம்!

சிறையில் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரருடன் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஐக்கிய மக்கள்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்