27.8 C
Jaffna
September 27, 2023
இலங்கை

முல்லைத்தீவு கடலில் உயிரிழந்த இளைஞனிற்கு 24ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது!

வவுனியா மரக்காரம்பளை பகுதியிலிருந்து நேற்றையதினம் சுற்றுலா சென்ற நிலையில் முல்லைத்தீவு நாயற்றுப் பகுதியில் இன்று நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர் தொடர்பிலான மனதை உருக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன..

மரக்காரம்பளையை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் நேற்றையதினம் முல்லைத்தீவு க்கு சென்ற நிலையில் இன்றையதினம் நாயாறு பகுதியில் நீராடியிருக்கின்றனர்.

அதன் போது, நீரோட்டத்தில் சிக்கிய நிலையில் மரக்காரம்பளையை சேர்ந்த கருணாரத்தினம் ஜெயசாந்தன் (29) என்ற இளைஞர் நீரில் மூழ்கிப் போன நிலையில் காணாமல் போயிருந்தார்.

கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் பின்னர் குறித்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞருக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி திருமணம் நடைபெற ஏற்பாடாகியிருந்ததாக குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0

இதையும் படியுங்கள்

குருந்தூர் மலையை அண்மித்த பகுதியில் சைவ ஆலயம் அமைக்க 3 ஏக்கர் காணியாம்!

Pagetamil

‘யாழில் புதிய மதுபானசாலைகள் வேண்டாம்’: ஏற்க மறுத்தது மாவட்ட அபிவிருத்திக்குழு!

Pagetamil

தாதியை கத்தரிக்கோலால் குத்திய வைத்தியரை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம்

Pagetamil

இலங்கையின் வரி வருவாய் குறைவு: சர்வதேச நாணய நிதியம் கவலை!

Pagetamil

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசு மரணம், மனைவியின் கர்ப்பப்பை அகற்றம்: கணவர் பொலிஸ் முறைப்பாடு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!