வடக்கில் 20 பேருக்கு கொரோனா தொற்று!

Date:

வடக்கில் இன்று 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 8 பேர் யாழ் மாவட்டத்தையும், 12 பேர் மன்னார் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

யாழ் மாவட்டத்தில், ஊர்காவற்றுறை பகுதியில் 6 பேரும், அச்சுவேலியில் ஒருவரும், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்த ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

அச்சுவேலியில் அடையாளம் காணப்பட்டவர், விசுவமடு பாடசாலையொன்றில் ஆசிரியையாவார். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டவர் நவாலியை சேர்ந்த பெண்ணாவார்.

மன்னார் அடையாளம் காணப்பட்டவர்களில், நகரில் கொமர்ஷல் கிரெடிட் நிறுவனத்தின் ஊழியர்கள் 5 பேர், சலூன் ஊழியர்கள் 2 பேர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், மாந்தை மேற்கில் 2 பேர், மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் இருவர் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

வட்டுக்கோட்டை 50: தமிழர் தேச உரிமை கோரிக்கை மீண்டும் முழக்கம்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழர்...

கனடாவில் ATM கொள்ளை – தமிழர் கைது

கனடாவின்  பீல் பிராந்தியத்திலுள்ள – பிராம்ப்டனில் நடந்த மூன்று கொள்ளைச் சம்பவங்கள்...

ஹோர்முஸில் அமெரிக்காவின் சுங்கக்கட்டணம் மட்டுமே இருக்கலாம்!

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தையாளர்கள் முடிக்கத் தவறினால், முக்கியத்துவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்