கிளிநொச்சியில் தனது 3 பிள்ளைகளையும் கிணற்றிற்குள் போட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்கப்பட்டுள்ளார். பிள்ளைகளில் ஒருவர் உயிரிழந்தார். மற்றைய இருவரையும் தேடும் பணி நடந்து வருகிறது.
வட்டக்கச்சி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
3,5,8 வயதான பிள்ளைகளை கிணற்றில் போட்டு விட்டு தாயாரும் கிணற்றிற்குள் குதித்துள்ளார். எனினும், அவர் கிணற்று கட்டை பிடித்து மிதந்துள்ளார். பின்னர் அயலவர்களால் மீட்கப்பட்டார்.
ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்டது. ஏனைய இரண்டு பிள்ளைகளையும் தேடும் பணி நடந்து வருகிறது.




