26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

பேச்செல்லாம் நன்றாயிருக்கிறது; முதலில் தொடங்குங்கள்: ருவிற்றரில் கோட்டாவை கலாய்த்த மங்கள!

நாட்டிலுள்ள அனைத்து மக்களும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான  உரிமையை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வயது, பாலினம், இனம், உடல் தோற்றம், நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

இன்று நினைவுகூரப்படும் ஜீரோ பாகுபாடு தினத்தை குறிக்கும் வகையில் ஜனாதிபதி ருவிற்றரில் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பதிவின் கீழ், கருத்திட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஜனாதிபதியின் புத்திசாலித்தனத்தை பாராட்டியதோடு, ‘பேச்சை செயற்படுத்துவதற்கு இன்னும் தாமதமாகவில்லை’ என்றும் கூறினார்.

“வயது, பாலினம், பாலியல், இனம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கண்ணியத்துடன் வாழ்வதற்கான ஒவ்வொருவரின் உரிமையையும் பாதுகாக்க விரும்பும் அனைவரையும் துரோகிகள் என்று முத்திரை குத்தாமல் நாம் தொடங்க வேண்டும்” என்று சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

Leave a Comment