எமது கட்சியை உடைக்கிறார் மாவை; ரெலோ குற்றச்சாட்டு: மாவையுடன் தொடர்பிலுள்ளவர்களிற்கு விசாரணை!

Date:

தமிழீழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஈடுபட்டு வருவதாக, அந்த கட்சியின் தலைமைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.

நேற்று (28) வவுனியாவில் ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் நடந்த போது, இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது குறித்து நேற்று தலைமைக்குழுவில் உறுப்பினர்கள் கருத்து வெளியிடும்போது,

ரெலோவினால் நாடாளுமன்ற அங்கத்துவம் வழங்கப்பட்ட கோடீஸ்வரனை இலங்கை தமிழ் அரசு கட்சி தனக்குள் கழற்றி எடுத்தது. அது குறித்து கேட்டபோது, கோடீஸ்வரனின் குடும்பம் பரம்பரை தமிழ் அரசு கட்சியினர் என மாவை சேனாதிராசா பொறுப்பில்லாமல் பதில் சொன்னார்.

ஆனால், பின்னர் அவர் தோல்வியடைந்த பின்னர் தமிழ் அரசு கட்சி கண்டுகொள்ளவில்லை. அவருக்கு தேசியப்பட்டியலும் வழங்கவில்லை. அவர்களிற்கு பதவியில் உள்ளவர்கள்தான் வேணும்.

இப்பொழுதும் ரெலோவின் யாழ் மாவட்ட உறுப்பினர்கள் சிலரை தன்னுடன் மாவை சேனாதிராசா வைத்துள்ளார். மாவை சேனாதிராசாவுடன் இணைந்து செயற்படும் உறுப்பினர்கள் சிலரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, வரும் திங்கள்கிழமை அவர்களை அழைத்து விளக்கம் கேட்பதென முடிவாகியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

அண்மைய வரலாற்றில் இப்படியொரு கொடூரம் நடக்கவில்லை: வித்தியா கொலை வழக்கு தீர்ப்பின் முழு விபரம்!

பாடசாலை மாணவி வித்தியாவைக் கடத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை...

திட்டமிட்டபடி இன்று பதவியேற்பு விழா இல்லை: ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்

தமிழக முதல்வராக பதவி ஏற்க ஆளுநரை நேற்று சந்தித்து உரிமை கோரினார்...

தீயாய் பரவிய ‘அதிமுக + திமுக’ வியூக பேச்சு – என்னதான் நடக்கிறது?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மை எண்ணிக்கை கிடைக்காததால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்