நேற்றைய தொற்றாளர் விபரம்!

Date:

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

இலங்கையில் நேற்று 460 COVID-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர், நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 82,890 ஆக அதிகரித்தது.

நேற்று இரத்தினபுரி மாவட்டத்தில் 62 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 32 பேர் எம்பிலிப்பிடியவிலிருந்தும், 14 பேர் எஹெலியகொடவிலிருந்தும் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்திலிருந்து 59 தொற்றாளர்களும், கம்பஹாவிலிருந்து 51 தொற்றாளர்களும், கண்டியில் இருந்து 50 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டனர்.

கொழும்பிலிருந்து 40 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் 19 மொரட்டுவவிலிருந்தும், 8 பேர் மகரகமவிலிருந்தும் அடையாளம் காணப்பட்டனர்.

மாத்தறையிலிருந்து 35 தொற்றாளர்கள், காலியில் இருந்து 21 தொற்றாளர்கள், அனுராதபுரத்திலிருந்து 18 தொற்றாளர்கள், குருநாகலிருந்து 17 தொற்றாளர்கள், பதுளையிலிருந்து 16 தொற்றாளர்கள் மற்றும் நுவரெலியாவிலிருந்து 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து 10 தொற்றாளர்கள், களுத்துறையிலிருந்து 9 தொற்றாளர்கள், கேகாலையிலிருந்து 7 தொற்றாளர்கள், மாத்தளை, வவுனியா மற்றும் புத்தளத்திலிருந்து தலா 3 தொற்றாளர்கள், அம்பாறை, பொலன்னறுவையிலிருந்து தலா 2 தொற்றாளர்கள், திருகோணமலை, மன்னார், மொனராகலையிலிருந்து தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 35 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து தொற்றாளர்கள் கண்டறியப்படவில்லை.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்