சாணக்கியனிடம் பணவசதியுள்ளது; வாலிபர் முன்னணி பொறுப்பை வழங்குங்கள்: சிறிதரன் சர்ச்சை பரிந்துரை!

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி தலைவராக இரா.சாணக்கியனை நியமிக்க வேண்டும். அவரிடம் பண வசதியுள்ளது. அவர் நன்றாக வேலை செய்வார் என சிபாரிசு செய்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (27) இடம்பெற்ற போது இந்த பரிந்துரையை வைத்தார்.

“இரா.சாணக்கியனிற்கு வடக்கு, கிழக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவுண்டு. அவரிடம் பணவசதிகளுமுண்டு. அவர் நன்றாக வேலை செய்வார். இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணிணி தலைவராக இப்போதுள்ள சேயோனை நீக்கி விட்டு, சாணக்கியனை தலைவராக்கலாம்“ என யோசனை தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன் நீண்ட செயற்பாட்டு பாரம்பரியத்தை கொண்டவர். கிழக்கில் சாதாரண உறுப்பினராக ஆரம்பித்து நெருக்கடியான காலகட்டங்களிலும் கட்சி செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பணவசதி இருக்கும் காரணத்தினால் சாணக்கியனிற்கு அந்த பொறுப்பை வழங்க வேண்டும், பணவசதியில்லாததால் சேயோனை அதிலிருந்து நீக்க வேண்டுமென்ற சாரப்பட சி.சிறிதரன் குறிப்பிட்டது கட்சிக்குள் பரவலான அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திருமணமானவருடன் காதல்: ஆடைத்தொழிற்சாலை யுவதிக்கு நேர்ந்த பயங்கரம்!

கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலை ஊழியரான யுவதி, தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு தொழிலாளியால்...

ஈரானிய கப்பலில் இருந்த 87 பேரின் சடலங்கள் மீட்பு!

இலங்கைக்கு அருகில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலில் மூழ்கிய ஈரானிய போர்க்...

இரண்டாம் உலகப்போரின் பின் இலங்கை கடற்கரையில் நடந்த சம்பவம்!

சனிக்கிழமை போரின் தொடக்கத்தில் இருந்ததை விட ஈரான் குறைவான ஏவுகணைகளை ஏவுகிறது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்