விலையேற்றத்தை கண்டித்து ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

Date:

நாட்டில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள விலையேற்றத்தை கண்டித்து சம்மாந்துறை நகரில் மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் இன்று (28) ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் பொருட்கள் சேவைகள் மீதான விலையேற்றத்தை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியின் சம்மாந்துறைத் தொகுதியின் பிரதான அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.புஹாரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திகாமடுல்ல மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பியதிஸ்ஸ, மாவட்ட அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது “அரசே எரிபொருள், விவசாய கிருமிநாசினிகளின் விலைகளை குறை, நிவாரணம் கொடு”, “பொருட்களின் விலையை ஏற்றாதே மக்களின் வயிற்றில் அடிக்காதே”, பொருட்களின் விலை விண்ணை நோக்கி, மக்கள் சட்டியிலிருந்து அடுப்பிற்குள், பிள்ளைகள் பட்டினினையை நோக்கி”, “உலக சந்தையில் குறைவு நலுகையை மக்களுக்கு வழங்கு”, வாழ்க்கை செலவை குறை, மக்களுக்கு நிவாரணம் வழங்கு”, கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கு”, கத்தரித்த ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கு” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

-சம்மாந்துறை நிருபர் – ஐ.எல்.எம் நாஸிம்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை கோரி ராமதாஸ் புதிய மனு

பிரச்​சா​ரத்​தின்​போது தனது ​படத்தை பயன்​படுத்​த தடை கோரி பாமக நிறு​வனர் ராம​தாஸ்...

இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம்; செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் திருப்பித்தர ஒப்புக்கொண்டது: ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மத்திய கிழக்கைப்...

வவுனியா நகரில் முதியவரின் சடலம் மீட்பு

வவுனியா நகரில், கொறவப்பொத்தானை வீதியில், பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் முதியவர் ஒருவரின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்