Pagetamil
இலங்கை

ஹிஸ்புல்லாவை ஆஜர்படுத்தக் கோரிய மனு வாபஸ்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலாளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவியல் புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் திரும்பப் பெறப்பட்டது .

ஹிஸ்புல்லாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியிருந்தார்.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரோமேஷ் டி சில்வா தனது வாடிக்கையாளர் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால் மனுவை வாபஸ் பெற நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரினார். அதன்படி, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மற்றும் நீதிபதி தம்மிக கணேபொ ஆகியோர் மனுவை வாபஸ் பெற அனுமதித்தனர்.

மனுவில் பிரதிவாதிகளாக பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சிஐடி இயக்குநர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டனர்.

இதையும் படியுங்கள்

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் காணாமலாக்கப்பட்ட சம்பவம்: பிள்ளையான் கைதுக்கான காரணம் வெளியானது!

Pagetamil

நல்லூரில் கவிழ்ந்த டிப்பர்

Pagetamil

கோழி இறைச்சி, முட்டை விலைகள் அதிகரிப்பு!

Pagetamil

புதிய ஊழல் தடுப்பு சட்டத்தில் கைதான முதல் ஆள் நான் தான்!

Pagetamil

பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் வியாழேந்திரன் மீண்டும் சிறையில்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!