டைனமட்டுன் ஆயுர்வேத வைத்தியர் கைது!

Date:

திருகோணமலை,கிண்ணியா பிரதேசத்தில் டைனமட் மற்றும் சேவா நூலுடன் ஆயுவேத வைத்தியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து டைனமட் குச்சிகள் 37, டைனமைட்டை வெடிக்க வைக்கும் 372 அடி சேவா நூலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை பலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணல் நகர், கிண்ணியா 3ஐ சேர்ந்த ஆயுர்வேத வைத்தியரும் (44 வயது), ஜாவா நகர்,கிண்ணியா 6ஜ சேர்ந்த மீனவர் (41 வயது) ஒருவருமே கைதாகினர்.

கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் பயங்கரவாத செயற்பாட்டிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவர்.

spot_imgspot_img

More like this
Related

ஐஸ் சர்ச்சை: தெரணியகலவில் நடந்தது என்ன?

அவிசவெல்ல பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட குழு ஒன்று, நேற்று...

அம்பாறை பிசியோதெரப்பிஸ்ட் மரணம் I நான் அவனில்லை பாணியில் பல பெண்களை ஏமாற்றிய பலே கில்லாடி; 3 குழந்தைகள்… வழுக்கைத் தலைக்கு ‘விக்’!

தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகே காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை...

குழந்தையை காருக்குள் விட்டுவிட்டு மறந்துபோய் வேலைக்கு சென்ற தமிழ்ப்பெண்; குழந்தை பலி: ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்!

ஜேர்மனியின் ஷோர்ன்டார்ஃபில் (ரெம்ஸ்-மர் மாவட்டம்) புதன்கிழமை அன்று ஒரு காரில் சடலமாகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்