டைனமட்டுன் ஆயுர்வேத வைத்தியர் கைது!

Date:

திருகோணமலை,கிண்ணியா பிரதேசத்தில் டைனமட் மற்றும் சேவா நூலுடன் ஆயுவேத வைத்தியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து டைனமட் குச்சிகள் 37, டைனமைட்டை வெடிக்க வைக்கும் 372 அடி சேவா நூலும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடற்படை பலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணல் நகர், கிண்ணியா 3ஐ சேர்ந்த ஆயுர்வேத வைத்தியரும் (44 வயது), ஜாவா நகர்,கிண்ணியா 6ஜ சேர்ந்த மீனவர் (41 வயது) ஒருவருமே கைதாகினர்.

கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் பயங்கரவாத செயற்பாட்டிற்காக கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம்...

UPDATE: அவுஸ்திரேலிய கடன் மோசடி: இடைநீக்கப்பட்ட அதிகாரி தற்கொலையா?

ஒரு அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு கடன் தவணைகளை வழங்கும் போது, ​​திறைசேரிக்குச் சொந்தமான...

2.5 மில்லியன் டொலர் இணையத்திருட்டு: பணிநீக்கம் செய்யப்பட்ட நிதியமைச்சின் அதிகாரி சடலமாக மீட்பு!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணி நீக்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்