புகையிரதம் மோதி இளைஞன் பலி

Date:

இன்று (24) அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் இளைஞர் ஒருவர் மோதி உயிரிழந்தார். மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்தது.

மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தைச் சோந்த விக்கினேஸ்வரராஜா சதூசன் (26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு கருவப்பங்கேணி பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் மரணவீட்டிற்கு சென்ற இவர், அதிகாலை 4 மணியளவில் கொழும்பல் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற புகையிரதத்துடன் கருவப்பங்கேணி பிரதேசத்தில் மோதி படுகாயமடைந்தார். மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கோட்டாவின் கொடூர பழிவாங்கலுக்கு பரிகாரம்: ஷானி அபேசேகரவிற்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இயக்குநரான ஷானி அபேசேகரவை, காவல்துறை பிரதிப் பொலிஸ்...

இளம் மனைவியை காணவில்லையென கணவன் முறைப்பாடு!

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை...

அதிமுகவில் பழனிசாமிக்கு எதிராக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு

அதிமுகவில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக செயல்பட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்