26.3 C
Jaffna
March 3, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில்: மைத்திரி மீது குற்றவியல் வழக்கிற்கு பரிந்துரை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை நேற்று (22) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று அறிக்கை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேகவினால் 2019, செப்ரெம்பர், 21ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஜனக டி சில்வா தலைமையிலான 5 பேர் கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை, கடந்த பெப்ரவரி 1ஆம் திகதி தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது, கடமை தவறிய குற்றச்சாட்டில் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யலாமா என்பதை ஆராய, அறிக்கையை உடனடியாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்புமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

‘வடக்கு கிழக்கு மக்களின் ஆணையுடன் உருவான அரசாங்கம் இது’: ஐ.நாவில் சொன்னது அரசாங்கம்!

Pagetamil

Leave a Comment