மகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த இளம் தாய்!

Date:

பிபிலை- பெரலியவத்தை கிராமத்தில் வசிக்கும் இளம் தாயொருவர் நேற்று இரவு (21) தனது மூன்று வயது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பிபிலை பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் பெரலியவத்தையை சேர்ந்த டி.எம்.நதிகா பிரியதர்ஷனி (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குடும்ப தகராறைத் தொடர்ந்து அந்தப் பெண்ணும் அவரது மகளும் வீட்டின் அருகே 40 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்தனர். கிணற்றில் தாய் மற்றும் மகள் இறந்து கிடந்ததை உறவினர்கள் அவதானித்து பிபில பொலிசாருக்கு தெரிவித்தனர்.

இறந்த பெண்ணின் கணவர் ராணுவ வீரர் என்பது தெரிய வந்துள்ளது.

பிபில நீதிவான் சதுர பிரசன்ன அமரதுங்க இன்று (22) இறப்பு குறித்து விசாரணை நடத்த உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஐஸ் சர்ச்சை: தெரணியகலவில் நடந்தது என்ன?

அவிசவெல்ல பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்ட குழு ஒன்று, நேற்று...

அம்பாறை பிசியோதெரப்பிஸ்ட் மரணம் I நான் அவனில்லை பாணியில் பல பெண்களை ஏமாற்றிய பலே கில்லாடி; 3 குழந்தைகள்… வழுக்கைத் தலைக்கு ‘விக்’!

தெல்தெனிய மருத்துவமனைக்கு அருகே காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை...

குழந்தையை காருக்குள் விட்டுவிட்டு மறந்துபோய் வேலைக்கு சென்ற தமிழ்ப்பெண்; குழந்தை பலி: ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்!

ஜேர்மனியின் ஷோர்ன்டார்ஃபில் (ரெம்ஸ்-மர் மாவட்டம்) புதன்கிழமை அன்று ஒரு காரில் சடலமாகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்