மகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்த இளம் தாய்!

Date:

பிபிலை- பெரலியவத்தை கிராமத்தில் வசிக்கும் இளம் தாயொருவர் நேற்று இரவு (21) தனது மூன்று வயது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பிபிலை பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் பெரலியவத்தையை சேர்ந்த டி.எம்.நதிகா பிரியதர்ஷனி (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குடும்ப தகராறைத் தொடர்ந்து அந்தப் பெண்ணும் அவரது மகளும் வீட்டின் அருகே 40 அடி ஆழமுள்ள கிணற்றில் குதித்தனர். கிணற்றில் தாய் மற்றும் மகள் இறந்து கிடந்ததை உறவினர்கள் அவதானித்து பிபில பொலிசாருக்கு தெரிவித்தனர்.

இறந்த பெண்ணின் கணவர் ராணுவ வீரர் என்பது தெரிய வந்துள்ளது.

பிபில நீதிவான் சதுர பிரசன்ன அமரதுங்க இன்று (22) இறப்பு குறித்து விசாரணை நடத்த உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் வெளியேறியதால் அதிருப்தி

.ஊடக சந்திப்பு என அழைத்து விட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் கூறாமல்...

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாஸ்டர்ஸ் கரம் போட்டி – 2026

தெமட்டகொட யுனைடெட் விளையாட்டுக்கழகம் தனது 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்