மேலும் 2 கொரொனா மரணங்கள்!

Date:

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (20) அறிவித்துள்ளார்.

இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அறிவிக்கப்பட்ட மரண விபரங்கள் வருமாறு-

குருவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த, 66 வயதான ஆண் ஒருவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இருந்து கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (19) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், சுவாசத் தொகதி செயலிழப்பு, குருதி விஷமடைவு, கொவிட்-19 நிமோனியா மற்றும் புற்நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திஹாரி பிரதேசத்தைச் சேர்ந்த, 78 வயதான ஆண் ஒருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (20) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பதவியை துறக்கிறார் பிரிட்டன் பிரதமர்

பல மாத கால அழுத்தத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...

சர்வதேச அணுசக்தி முகமையை நாட்டிற்குள் அனுமதிக்க ஈரான் இணக்கம்!

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப்...

வவுனியா மாநகரசபையில் குழப்பம்

உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று இடம்பெற்ற மாநகரசபையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்