சண்டையை விலக்க ஓடிப்போனவர் கிணற்றிற்குள்ளிருந்து சடலமாக மீட்பு!

Date:

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று அவர் வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் முரண்பாடு ஏற்பட்டுள்ளமையை உணர்ந்து அங்கு ஓடிச்சென்றுள்ளார்.

இதன்போது மரத்துடன் தவறுதலாக மோதி அருகிலிருந்த கிணற்றிற்குள் விழுந்து மூழ்கி சாவடைந்துள்ளார்.

ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் விஜயகுமார் (41) என்ற குடும்பஸ்தரே சாவடைந்துள்ளார்.

அவரது மரணம் தொடர்பாக வவுனியா நகர திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்