சண்டையை விலக்க ஓடிப்போனவர் கிணற்றிற்குள்ளிருந்து சடலமாக மீட்பு!

Date:

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று அவர் வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் முரண்பாடு ஏற்பட்டுள்ளமையை உணர்ந்து அங்கு ஓடிச்சென்றுள்ளார்.

இதன்போது மரத்துடன் தவறுதலாக மோதி அருகிலிருந்த கிணற்றிற்குள் விழுந்து மூழ்கி சாவடைந்துள்ளார்.

ஈச்சங்குளம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் விஜயகுமார் (41) என்ற குடும்பஸ்தரே சாவடைந்துள்ளார்.

அவரது மரணம் தொடர்பாக வவுனியா நகர திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்கள்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், ரியான் வான் நீகெர்க்கை தேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும்,...

ஜனாதிபதியை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணி

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியினர் இன்று...

தாடியுடன் நீதிமன்றம் வந்த பிள்ளையான்!

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத் துணைவேந்தர் ஒருவர் காணாமல் போனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்