கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!

Date:

கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் நபர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நேற்று நாகேந்திரம் பகுதியில் நெல் அறுவடைக்கு வந்த சிங்காரவேல் மனோகரன் (37) என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் நெல் அறுவடைக்காக வந்திருந்ததார். அதை முடித்துக்கொண்டு நேற்றிரவு குளிக்கச் சென்ற பின்னர் காணாமல்போயுள்ளார்.

அதன் பின்னர் அவரை தேடும் நடவடிக்கையின்போது, அவரது உடை மற்றும் சவற்காரம் என்பன கிணற்றின் அருகில் இருந்ததை அவதானித்த ஏனைய நபர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் தேடல் பணிகளை தொடங்கியபோது, மேற்படி நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழகத்தில் குதிரை பேரம் தீவிரம்: 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் பல்டி!

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா...

துப்பாக்கி மீட்பு

பொலன்னருவை சோமவதி சரணாலயத்தில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி...

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்