30.7 C
Jaffna
March 29, 2024
தமிழ் சங்கதி

கூட்டமைப்பிற்குள் வரும் மோதல்கள் தமிழர்களிற்கு நல்லதல்ல: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!

“அதிகார பரவலாக்கலுக்கு தனிப்பட்டரீதியில் நான் எதிரானவன். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நடக்கும் இப்போதைய மோதல்கள் நல்லதல்ல. அந்த மக்கள் நீண்டகாலமாக போராடுகிறார்கள். அவர்களின் பிரதிநிதியான நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டாமா?“

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஒருவரை இப்படி கண்டித்துள்ளார், ஆளும் பொதுஜன பெரமுனவின் அமைச்சர் நிமல் சிறிபால  சில்வா.

இதில் வித்தியாசமாக செயற்பட்டுள்ளார் மூத்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.

நேற்று முன்தினம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியொன்றின் தலைவருடன், புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

நான் தனிப்பட்டரீதியில் அதிகார பரவலாக்கலுக்கு எதிரானவன். அதை விடுங்கள். ஆனால், அந்த மக்கள் நீண்டகாலமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டமைப்பினர் அதற்கு பொறுப்பானவர்களாக செயற்பட வேண்டுமல்லவா. கூட்டமைப்பிற்குள் இவ்வளவு பிரச்சனை வருவது நல்லதல்ல. அந்த மக்களிற்காக இதை சொல்கிறேன்“ என தெரிவித்துள்ளார்.

உடைப்பது, பிரிப்பது, குழப்புவதே எமது தாரக மந்திரம் என குழம்பிப் போயுள்ள கூட்டமைப்பினர் திருந்துவார்களா?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் சிறிதரனை மௌனமாக்கியது எது?

Pagetamil

வெடுக்குநாறிமலை அட்டூழியம்: தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட முஸ்தீபு!

Pagetamil

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக செயற்பட்டதால் கடல் கடக்க அனுமதிக்க முடியாது: வி.மணிவண்ணனின் கோரிக்கையை நிராகரித்த பாதுகாப்பு அமைச்சு!

Pagetamil

‘திருகோணமலை குழப்பத்துக்கு முடிவில்லாமல் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டாம்’: தமிழ் அரசு கட்சியின் தலைமைக்கு இரா.சம்பந்தன் மீண்டும் அறிவித்தல்!

Pagetamil

‘எனது ஆதரவாளர்கள் புறமொதுக்கப்படுகிறார்கள்’: சுமந்திரனை தடுப்பது உத்தியா?; சம்பந்தனின் புகாரின் பின்னணி!

Pagetamil

Leave a Comment