யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 24 பேருக்கு தொற்று உறுதியானது.
இன்று 279 பேரின் பிசிஆர் மாதிரிகள் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டன.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்கள் கெருடாவில், தொண்டமானாறு பகுதிகளை சேர்ந்தவர்கள்.
வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் 7 பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள்.
தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கு தொற்று உறுதியானது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.
யாழ் மாவட்டத்தில் 21 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் 12 பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள்.
இதுதவிர, வசாவிளான் தனிமைப்படுத்தல் மையத்தில் 3 பேருக்கு தொற்று உறுதியானது.
இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்திலும் கொரோனா பரிசோதனை இடம்பெற்றது. அத்துடன், சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக அன்டிஜன் சோதனையும் இடம்பெற்றது.




