உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று: கண்டாவளை பிரதேச செயலகம் தற்காலிகமாக மூடப்பட்டது!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் செயலகத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொடிகாமத்தினைச் சேர்ந்த கண்டாவளை பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் எழுமாற்றான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு கடந்த இரவு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று பிரதேச செயலகச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் மாதிரிகள் பெறப்படுகின்றன.

இந்நிலையில் உத்தியோகத்தர்களின் பிசிஆர் முடிவுகள் வெளிவந்த பின்னர் பிரதேச செயலகச் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும், பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் உட்பட்ட மிக அவசியமான தேவைகளை அரச செயலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளுமாறு பிரதேச செயலர் த.பிருந்தாகரன் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்