ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 50,000 ஸ்பூட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று காலை இலங்கையை வந்தடைந்தன.
இன்று காலை 12:35 மணியளவில் கமலேயா ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தடுப்பூசிகள் வந்துள்ளன.
தடுப்பூசிகள் விமான நிலைய சரக்கு முனையத்தின் இறக்குமதி பிரிவில் குளிர்சாதன பெட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. கொழும்பில் உள்ள அரச மருந்துகள் கழகத்தின் மத்திய கிடங்கிற்கு சிறப்பு குளிரூட்டப்பட்ட லொரிகள் மூலம் கொண்டு செல்லப்படும்.




