பாசிக்குடாவில் கரையொதுங்கிய சடலம்

Date:

மட்டு பாசிக்குடா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (17) காலையில் மீட்டகப்பட்டுள்ளதாகவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பொலிசாரை நாடுமாறு பாசிக்குடா பொலிசார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடற்கரை பகுதியில் சம்பவ தினமான இன்று காலை கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதை கண்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்

இதனையடுத்து பொலிசார் குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் குறித்தவர் அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பாசிக்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...

வெளிநாட்டு பணப்பரிமாற்றம்: 4 வங்கி முகாமையாளர்கள் கைது செய்யப்பட்ட பின்னணி!

இலங்கைக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதாகக் கூறி, சுமார் 1 பில்லியன் அமெரிக்க...

ஈரான் சரணடைய வேண்டும்; ஓமான் குறுக்கே வந்தால் அடிப்போம்: ட்ரம்ப்

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான ஒப்பந்தத்தை ஈரான் செய்யாது என்றும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்