போலி விசா… போலி பாஸ்போர்ட்… போலி பிசிஆர்: பிரான்ஸ் செல்ல முயன்ற முல்லைத்தீவு யுவதி சிக்கினார்!

Date:

மோசடியான ஆவணங்களை சமர்ப்பித்து பிரான்ஸிற்கு செல்ல முயன்ற யுவதியொருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சமர்ப்பித்த பிசிஆர் அறிக்கையும் போலியானது என்பது தெரிய வந்துள்ளது

முல்லைத்தீவு, மாங்குளத்தை சேர்ந்த 25 வயதான யுவதியொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3.45 மணிக்கு கத்தார் ஏர்வேஸ் விமானம் கியூஆர் -669 விமானத்தில் கத்தார் வழியாக பிரான்ஸ் பயணிக்க,  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு யுவதி சென்றிருந்தார்.

அவர் வழங்கிய பிரான்ஸ் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களில் சந்தேகமேற்பட்டதால், அவர் விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடிவரவுத் துறையின் எல்லை கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதையடுத்து, அவரது பிரான்ஸ் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

தொழில்நுட்ப ஆய்வுகளில், அவர் சமர்ப்பித்த பிரான்ஸ் கடவுச்சீட்டு மோசடியானது என்று கண்டறியப்பட்டது. அதில் போலியான முறையில் முத்திரைகளும் பொறிக்கப்பட்டிருந்தன.

பின்னர் யுவதியின் பொதிகளில் சோதனையிட்ட போது, அவரது இலங்கை கடவுச்சீட்டு கண்டறியப்பட்டது.

நாட்டை விட்டு வெளியேறும் போது இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்த திட்டமிட்டதாகவும், இதை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், தொழில்நுட்ப சோதனைகளில் இலங்கைகடவுச்சீட்டில் உள்ள அனைத்து குடிவரவு முத்திரைகளும் போலியானவை என்பது தெரியவந்தது.

குடிவரவு மற்றும் குடிவரவுத் துறைக்கு வழங்கத் தயாரித்த போலி விமான டிக்கெட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

மோசடி ஆவணங்களை சமர்ப்பித்து கட்டாரின் தோஹா சென்று, அங்கிருந்து எதியோப்பியாவின் அடிஸ் அபாபா சென்று, பின்னர் மேற்கு ஆபிரிக்க நாடான பெனின் ஊடாக பிரான்ஸின் பாரிஸிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

நாட்டை விட்டு வெளியேற விமான ஊழியர்களிடம் ஒரு பி.சி.ஆர் அறிக்கையையும் சமர்ப்பித்திருந்தார்.  தொழில்நுட்ப சோதனைகளில், பிசிஆர் சோதனை அறிக்கையும்  போலி ஆவணம் என்று தெரியவந்தது.

பின்னர் யுவதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்கு சமர்ப்பித்த ஆவணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலைய சிஐடியினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்