இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல்முறையாக சி.ஐ.டிக்கு பிரதிப் பணிப்பாளராக பெண் அதிகாரி நியமனம்!

Date:

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக குற்றவியல் புலனாய்வுத் துறையின் (சிஐடி) பிரதி பணிப்பாளராக ஒரு பெண் பொலிஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்எஸ்பி) இமேஷா முத்துமால சிஐடியின் பிரதி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஒப்புதலின் பேரில் இந்த நியமனம் செய்யப்பட்டது.

எஸ்எஸ்பி இமேஷா முத்துமால 2007 நவம்பர் 03 ஆம் திகதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக (ஏஎஸ்பி) நியமிக்கப்பட்டு, பொலிஸ் சேவையில் 14 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார்.

ருஹுணு பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டதாரியான இவர், நுகேகொட காவல் பிரிவு, குற்ற புலனாய்வுத் துறை மற்றும் பொலிஸ் அனுமதிப் பிரிவில் பணியாற்றியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்