தண்ணீரில் சிக்கிய குடும்பம்; 7வயது சிறுவனின் அபார செயல்!

Date:

அமெரிக்காவின் புளோரிடா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீவன் போவ்சிட், இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் வார விடுமுறைகளில் தன் குழந்தைகளுடன் எங்காவது வெளியே செல்வது வழக்கம் இப்படியாக இவர் சமீபத்தில் தன் குழந்தைகளான செஸ் என்ற மகனையும், அபிகேல் என்ற மகளையும் அழைத்துக்கொண்டு அருகே உள்ள ஆற்றில் படகில் சென்று மீன் பிடிக்க திட்டமிட்டு இருவரையும் அழைத்து சென்றுள்ளார்.

அமெரிக்காவை ஆற்றில் மீன் பிடிக்க செல்ல சில விதிமுறைகள் உள்ள 6 வயதிற்கு குறைவானவர்கள் கட்டாய் லைப் ஜாக்கெட் அணிந்து தான் ஆற்றில் படகில் செல்ல வேண்டும் என்பது அந்த விதிமுறை அதன் படி தன் மகளுக்கு மட்டும் லைப் ஜாக்கெட் போட்டுவிட்டு தன் மகனையும் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்பொழுது ஆற்றில் தீடீரென தண்ணீர் அதிகமாக இழுவை ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத ஸ்டீவன் கரைக்கு திரும்ப முயற்சித்தார் ஆனால் முடியவில்லை, மூவரும் நடு ஆற்றில் சிக்கிக்கொண்டனர்.

ஸ்டீவன் உதவிக்காக பல முறை கத்தியும் யாரும் வரவில்லை. ஸ்டீவனிற்கும், அவரது மகன் சேஸிற்கும் நீச்சல் தெரியும் அதனால் அவர்கள் நீந்தி கரைக்கு செல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் அபிகேலுக்கு நீச்சல் தெரியாது. அதனால் அபிகேலை மட்டும் தனியாக விட்டு செல்ல மனம் இல்லாமல் ஸ்டீவன் தன் மகன் சேஸை மட்டும் கரைக்கு சென்று உதவி பெறும் படி அனுப்பினார்.

அதன் படி சேஸ் சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து நீச்சலடித்து கரைக்கு வந்து உதவியை நாடினார். அதன் பின் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடு ஆற்றில் சிக்கிய ஸ்டீவனையும் அவரது மகள் அபிகேலையும் மீட்டனர்.

தனது தந்தையையும் சகோதரியையும் காப்பாற்ற 7 வயது சிறுவன் சுமார் 1 மணிநேரம் நீச்சலடித்து வந்தது. பலருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக இவ்வாறு நீச்சலடிப்பது நல்லபயிற்சி பெற்ற நீச்சல் வீரர்களால் மட்டுமே முடியும். இதையடுத்து அதிகாரிகள் சேஸின் தைரியத்தை பாராட்டினர். தந்தையையும் சகோதரியையும் காப்பாற்ற சிறுவனம் செய்த செயல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...

கிளிநொச்சியில் திடீர் வாகனப் பரிசோதனை

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவினரின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும்...

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்