அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அதிரடி ஊதிய உயர்வு ;ஷார்ஜா மன்னர் அறிவிப்பால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி!

Date:

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக ஆச்சரியப்படும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஷார்ஜாவின் மன்னர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி. இவர் சமீபத்தில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது, பொதுமக்கள் குறைந்த வருவாய் உடன் வாழ்க்கையை போராட்டத்துடன் நடத்த அனுமதிக்க மாட்டேன். அரசு ஊழியர்களின் தரத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாழ்க்கை நடத்துவதற்கான செலவீனங்கள் அதிகரித்தால் அதற்கேற்ப ஊதியமும் உயர்த்தப்பட வேண்டும்.

அதன்படி, ஷார்ஜாவில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மாத ஊதியம் 17,500 திராம்களில் இருந்து 25,000 திராம்களாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். இது கடந்த மே ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இது ஷார்ஜா மக்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பேசுகையில் ஏழு துறைகளில் வேலைவாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

இவற்றில் தகுதியான நபர்களுக்கு உடனடியாக அரசு வேலை வழங்கப்படும். ஓய்வு பெற்றவர்களிலும் உரிய நபர்கள் தேர்வு செய்து பணி வழங்க உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிகப்பெரிய பட்ஜெட்டிற்கு ஷார்ஜா அரசு ஒப்புதல் அளித்தது. மொத்த பட்ஜெட்டான 33.6 பில்லியன் திராம்களில் 47 சதவீதத்தை ஊதியத்திற்காக மட்டும் அரசு ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக ஷார்ஜா மக்கள் கூறுகையில், குறைந்த வருவாய் கொண்ட அரசு ஊழியர்கள் மற்றும் குடிமக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அரசின் உத்தரவு பெரிதும் உதவிகரமாக இருக்கும். மன்னரின் அறிவிப்பு எமிரேட்ஸ் சமூக மக்களிடம் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர்.

மேலும் வேலையின்றி தவிக்கும் பலர் அரசுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக ஓய்வு பெற்றவர்களுக்கும் பணி வாய்ப்பு என்ற அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஓய்வூதியமின்றி தவிக்கும் பலரின் வாழ்வு மேம்படும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்