பசியால் வாடும் மக்களுக்கு உணவளித்த ‘குக் வித் கோமாளி’ நடிகை ; குவியும் பாராட்டு!

Date:

ஊரடங்கு நேரத்தில் பசியால் தவித்து வரும் மக்களுக்கு நடிகை தர்ஷா குப்தா உணவளித்து வருகிறார்.

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா. ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்” என்ற சீரியலின் மூலம் அறிமுகமான இவர், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார்.

அதன்பிறகு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார். இந்த நிகழ்ச்சியில் தர்ஷாவுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கொடுத்தனர் ரசிகர்கள். தற்போது மோகன் ஜி இயக்கும் ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இதற்கிடையே கொரானா பரவல் காரணமாக முழு ஊடரங்கு அமலில் உள்ளது. இதனால் சாலை ஓரங்களில் வாழும் மக்கள் பசியால் வாடி வருகின்றனர். இந்நிலையில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடிகை தர்ஷா குப்தா, தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார். அதேபோன்று தானே நேரில் சென்று ஏழை மக்களுக்கு உணவும் கொடுத்து வருகிறார். தர்ஷாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்