இரத்தினபுரியை கலக்கிய முச்சக்கர வண்டி திருட்டு கும்பல் சிக்கியது!

Date:

இரத்தினபுரி பகுதியில் முச்சக்கர வண்டிகள் தொடர்ந்து திருடப்பட்ட மர்மத்தை பொலிசார் கண்டறிந்துள்ளனர். முச்சக்கர வண்டிகளை திருடி, மீண்டும் வேறு வர்ணம் பூசப்பட்டு, நம்பர் பிளேட்டுகள் மாற்றப்பட்டு விற்பனை செய்து வந்த கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

இரத்தினபுரி பகுதியில் தினமும் குறைந்தது இரண்டு முதல் மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் தினமும் திருடப்பட்டதாக கடந்த காலங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் விசாரணை நடத்திய பொலிசார், திருடப்பட்ட முச்சக்கர வண்டியுடன் ஒரு நபரை கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளில் நேற்று திருடப்பட்ட 13 முச்சக்கர வண்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலை சிறிது அதிகரிக்கும்: ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவிவரும் சூழ்நிலை காரணமாக, இலங்கையில் அண்மைக்காலத்தில் எரிபொருள் விலையில்...

திறைசேரி அதிகாரி தற்கொலை செய்து கொண்டது உறுதி!

நிதி அமைச்சகத்தின் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவிப் பணிப்பாளர் ஒருவரின் சந்தேகத்திற்கிடமான மரணம்,...

வெயின் உச்சம் ஆபத்தான நிலைமைகளில் மாடுகள்

தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம் ஊர்காவற்துறைபிரதேசங்களில் மாடுகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்